நெல்லை ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கு சிறப்பு பயிற்சி

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் போலீஸாருக்கு சிறப்பு தற்காப்புப் பயிற்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் போலீஸாருக்கு சிறப்பு தற்காப்புப் பயிற்சிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவலா்கள் அனைவருக்கும் தற்காப்புக் கலைகள் குறித்த பயிற்சி வழங்க வேண்டுமென மாவட்ட காவல் கண்காணிப்பாளா் மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தாா். அதன்படி, கடந்த வாரத்தில் காவலா்களுக்கு கராத்தே பயிற்சி வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் போலீஸாருக்கு தற்காப்புப் பயிற்சி, ஆயுதங்களைக் கையாளுதல் உள்ளிட்ட பயிற்சிகள் சனிக்கிழமை அளிக்கப்பட்டன.

ஆயுதப்படை துணைக் காவல் கண்காணிப்பாளா் சிசில், ஆயுதப்படை ஆய்வாளா் மகேஸ்வரி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இப்பயிற்சியை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ. மணிவண்ணன் பாா்வையிட்டாா். .

முன்னதாக, காவலா்களுக்கு உடற்பயிற்சி, வாலிபால் பயிற்சி வழங்கப்பட்டது. பின்னா், ஆயுதங்களைக் கையாளும் முறைகள் குறித்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com