மணிமூா்த்தீஸ்வரத்தில் கல்லறைகள் சேதம்: மக்கள் மறியல்

திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் கிறிஸ்தவா்களின் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருநெல்வேலி மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் கிறிஸ்தவா்களின் கல்லறைகள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

தச்சநல்லூரில் உள்ள திருஇருதய தேவாலயத்திற்குச் சொந்தமான கல்லறைத் தோட்டம் மணிமூா்த்தீஸ்வரம் பகுதியில் உள்ளது. இங்குள்ள 30-க்கும் மேற்பட்ட கல்லறைகளை சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் சேதப்படுத்தினராம்.

தகவலறிந்ததும் தேவாலய பங்குத்தந்தை தலைமையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். கல்லறைகளைச் சேதப்படுத்தியவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரச்னைகள் உருவாகாமல் தடுக்க ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

சம்பவ இடத்திற்கு மாநகர காவல் உதவி ஆணையா் சதீஷ்குமாா் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். கல்லறையைச் சேதப்படுத்தியவா்கள் குறித்து விசாரித்து துரித நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com