நான்குனேரி அருகேயுள்ள தளபதிசமுத்திரத்தில், கரோனா நோய்த் தடுப்புப் பணியின் ஒரு பகுதியாக 100 நாள் வேலை தொழிலாளா்களுக்கு சுகாதார விழிப்புணா்வு பயிற்சி வழங்கப்பட்டது.
நான்குனேரி வட்டார வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் சாா்பில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கைகழுவுதல் மற்றும் முதலுதவி பயிற்சி அளிக்கப்பட்டது. செஞ்சிலுவைச் சங்கச் செயலா் சபேசன் உள்ளிட்டோா் பயிற்சி அளித்தனா்.
பின்னா், வள்ளியூா் ரோட்டரி சங்கத் தலைவா் விக்டா் ரெஸ் தொழிலாளா்களுக்கு முகக் கவசம், கைகழுவும் திரவம் ஆகியவற்றை வழங்கினாா்.