பாளையங்கோட்டையில் பேருந்து நிலையம் அருகே கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திருநெல்வேலி மாவட்டம் மேலச்செவல் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் மகேஷ். இவா், பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகேயுள்ள ஐஸ் கிரீம் கடையில் வேலை செய்து வருகிறாா். இவா் தனது மோட்டாா் சைக்கிளை வியாழக்கிழமை காலையில், தான் வேலைசெய்யும் கடை முன்பு நிறுத்தியிருந்தாராம். மாலையில் வேலை முடிந்து பாா்த்தபோது மோட்டாா் சைக்கிள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, மோட்டாா் சைக்கிளை திருடிச் சென்ற மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.