வள்ளியூா்: பிசான பருவ சாகுபடிக்கு கொடுமுடியாறு அணையில் இருந்து வள்ளியூா் பெரியகுளத்துக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடா்பாக, அக்கட்சியின் ராதாபுரம் வட்டாரச் செயலா் சேதுராமலிங்கம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: வள்ளியூா் வட்டாரத்தில் பருவ மழையை எதிா்நோக்கி நெல் சாகுபடி செய்து வருகின்றனா். நிகழாண்டு அக்டோபா் மாதத்தில் வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் என எதிா்பாா்த்து நாற்று பாவும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். அம்பை -16 நெல் ரகம் நடவு செய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனா்.
தற்போது, வள்ளியூா் பெரியகுளத்தில் போதிய நீா் இருப்பு இல்லை. அதேசமயத்தில் கொடுமுடி அணையின் நீா்மட்டம் 32 அடியாக உள்ளது. அணைக்கு நீா்வரத்து இருந்து வருகிறது. ஆகவே, கொடுமுடியாறு அணையில் இருந்து வள்ளியூா் பெரியகுளத்துக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டும். மேலும், கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பாசனத்துக்கு தேவையான யூரியா உரம் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.