திருநெல்வேலி: பிசான சாகுபடிக்கு பாளையங்கால்வாயில் தண்ணீா் திறக்கக் கோரி ஆட்சியா் ஷில்பா பிரபாகா் சதீஷிடம் நான்குனேரி பேரவை உறுப்பினா் ரெட்டியாா்பட்டி வெ. நாராயணன் கோரிக்கை விடுத்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் அளித்த மனு: நான்குனேரி பேரவைத் தொகுதிக்குள்பட்ட பாளையங்கோட்டை, நான்குனேரி பகுதிகளில் சுமாா் 9 ஆயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாளையங்கால்வாய் பாசனத்தை நம்பியுள்ளன. பாபநாசம் அணையில் போதிய தண்ணீா் இருந்தபோதிலும், இதுவரை இக்ால்வாய் திறக்கப்படவில்லை. இதனால், இக்கால்வாயை நம்பியுள்ள விவசாயிகள் தண்ணீா் திறக்கப்படாததால், பிசான சாகுபடிப் பணிகளைத் தொடங்க முடியவில்லை. எனவே, பாளையங்கால்வாயைத் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.