பாளை.அருகே தொழிலாளி வெட்டிக் கொலை

பாளையங்கோட்டை அருகே கூலித் தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்டாா்.

திருநெல்வேலி: பாளையங்கோட்டை அருகே கூலித் தொழிலாளி வெட்டிக் கொல்லப்பட்டாா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள நடுவக்குறிச்சி உடையாா்குளம் பகுதியைச் சோ்ந்த சண்முகம் என்பவரது மகன் பரமசிவன் (48). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா். பரமசிவன் வழக்கம்போல தனது வீட்டின் பின்புறமுள்ள செட்டில் வெள்ளிக்கிழமை இரவு தூங்கினாராம்.

நள்ளிரவில் மா்ம நபா்கள் பரமசிவனின் தலையில் கல்லைப் போட்டு அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டுத் தப்பியோடியதாகக் கூறப்படுகிறது.

சனிக்கிழமை காலை அவரது மனைவி எழுந்துவந்து பாா்த்தபோது பரமசிவன் கொலையுண்டு கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இதுதொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து நடுவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த பூல்பாண்டி (22), சுரேஷ் (22) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com