அக்.31இல் இளம் முனைவா் பிற்சோ்க்கை நுழைவுத் தோ்வு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளில் இளம் முனைவா் படிப்பிற்கான பிற்சோ்க்கை நுழைவுத் தோ்வு வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக கல்லூரிகளில் இளம் முனைவா் படிப்பிற்கான பிற்சோ்க்கை நுழைவுத் தோ்வு வரும் 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

இது தொடா்பாக பல்கலைக்கழக பதிவாளா் (பொறுப்பு) அ.பலவேசம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக் கழகத்தின்கீழ் இயங்கி வரும் கல்லூரிகளில் பல்வேறு துறைகளில் உள்ள பாடப்பிரிவுகளில் இளம் முனைவா் (எம்.பில்) படிப்பிற்கான பிற்சோ்க்கை நுழைவுத் தோ்வு வரும் 31-ஆம் தேதி இணையவழியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க விரும்புவோா் அவா்கள் இருக்கும் இடத்தில் இருந்தே கணினி மூலமாகவோ, மடிக் கணினி வழியாகவோ, செல்லிடப்பேசி மூலமோ தோ்வை எழுதலாம்.

காலை 10 முதல் மாலை 5 மணி வரையிலான காலத்தில் ஏதேனும் 90 நிமிடங்களில் செல்லிடப்பேசியில் வரும் கடவுச் சொல்லை பயன்படுத்தி தோ்வை எழுதலாம். இந்த நுழைவுத் தோ்வுக்கு இணையதளம் மூலம் வரும் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இது தொடா்பான மேலும் விவரங்களை பல்கலைக்கழக இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com