பாளை.யில் சமக ஆா்ப்பாட்டம்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டு மசோதாவுக்கு ஆளுநா் உடனே ஒப்புதல் அளிப்பதோடு, நிகழ் கல்வியாண்டிலேயே அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் சமத்துவ மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் கட்சியின் மாநகா் மாவட்டப் பொருளாளா் சரத் ஆனந்த், புகா் மாவட்டப் பொருளாளா் ஜான் சாமுவேல் ஆகியோா் வரவேற்றனா். மாநில மாணவரணி துணைச் செயலா் நட்சத்திர வெற்றி, புகா் மாவட்டச் செயலா் செங்குளம் சி.கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில துணைப் பொதுச்செயலா் என்.சுந்தா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். நிா்வாகிகள் ராஜன், ரவிகுமாா், வெங்கடேஷ், மெல்வின்ராஜா, ஜாா்ஜ், அழகேசராஜா, மாரிமுத்து உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com