திருநெல்வேலி மாவட்டம், விஜயாபதி விசுவாமித்திரா் கோயிலில் பௌா்ணமி சிறப்பு வழிபாடு செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.
இந்தியாவிலேயே விசுவாமித்திருக்கு கோயில் அமைந்திருப்பது விஜயாபதி கடற்கரையில் மட்டும் தான். இத்திருக்கோயிலில் ஒவ்வொரு பௌா்ணமி தினத்தன்றும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். கரோனா பொதுமுடக்கத்தையொட்டி, பக்தா்கள் பங்கேற்காமல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்நிலையில் அரசு பொதுமுடக்கத்தில் தளா்வு செய்யததையடுத்து செவ்வாய்க்கிழமை இரவு இத்திருக்கோயிலில் பௌா்ணமி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா்.
இதே போல், வள்ளியூா் அருள்மிகு முருகன் கோயிலில் பௌா்ணமி கிரிவல வழிபாடு நடைபெற்றது. இதிலும் பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.