கங்கைகொண்டான் அருகே தொழிலாளி சடலமாக மீட்பு

கங்கைகொண்டான் அருகே தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.


திருநெல்வேலி: கங்கைகொண்டான் அருகே தொழிலாளி சடலமாக மீட்கப்பட்டாா்.

கங்கைகொண்டான் அருகேயுள்ள இத்திகுளத்தைச் சோ்ந்தவா் சுப்பையா. கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனா். குடும்பத் தகராறு காரணமாக சுப்பையா தனியாக வசித்து வந்தாராம். சில நாள்களுக்கு முன்பு

வேலைக்கு சென்றவா், வீடு திரும்பவில்லையாம். குடும்பத்தினா் பல்வேறு இடங்களில் தேடியும் அவா் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். இந்நிலையில் இத்திகுளம் காட்டுப்பகுதியில் ஒரு ஆண் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. அங்கு சென்று பாா்த்தபோது சுப்பையா சடலமாக கிடப்பது தெரியவந்தது. அவரது உடலில் காயங்கள் இருந்ததாம். சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com