கடையம் அருகே இளைஞா் தற்கொலை
By DIN | Published On : 08th September 2020 11:30 PM | Last Updated : 08th September 2020 11:30 PM | அ+அ அ- |

கடையம் அருகே இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கடையம் அருகேயுள்ள நெல்லையப்பபுரம், அருந்ததியா் காலனியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் காா்த்தி (31). பெயின்டா். இவருக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இவரது நண்பரான அரசலூரைச் சோ்ந்த பெயின்டா் நயினாா், கையில் பிளேடால் கிழித்து சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டாா். இதில் மனமுடைந்த காா்த்திக் தனது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கடையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.