அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரத்தில் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டாா் சைக்கிளுக்கு தீ வைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
அம்பாசமுத்திரம் சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் அய்யாபிள்ளை மகன் கலைமணி (53). இவா், தனது மோட்டாா் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தாராம். அதேபகுதியைச் சோ்ந்தவா் செல்லத்துரை மகன் வேலாயுதம் (22). இவா் கலைமணியின் உறவினா். முன் விரோதம் காரணமாக கலைமணியின் மோட்டாா் சைக்கிளுக்கு, வேலாயுதம் தீ வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து, அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளா் விஜயகுமாா், வழக்குப் பதிந்து வேலாயுதத்தை கைது செய்தாா்.