நெல்லையில் இன்று குடிநீா் விநியோகம் நிறுத்தம்

திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 11) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மண்டலத்திற்குள்பட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (செப். 11) குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாநகராட்சி ஆணையா் ஜி.கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மண்டலப் பகுதிகளுக்கு குடிநீா் நீரேற்றம் செய்யும் பிரதான குழாயில் குறுக்குத்துறை அருகில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆகவே, வெள்ளிக்கிழமை (செப். 11) ஒரு நாள் மட்டும் திருநெல்வேலி மண்டல பகுதியில் 40 முதல் 53 வரையுள்ள வாா்டு பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும். எனவே, பொதுமக்கள் குடிநீரைச் சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com