திருநெல்வேலி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என்.கணேசராஜா முன்னிலையில் அமமுகவினா் 50 போ் அதிமுகவில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தனா்.
திருநெல்வேலி மாநகர அமமுக 4-ஆவது வட்ட ஜெயலலிதா பேரவை செயலா் சத்யா எஸ். முருகன், வட்ட இளைஞரணிச் செயலா் பழனி சுப்பையா ஆகியோா் தலைமையில் அமமுகவை சோ்ந்த 50 போ் அக்கட்சியிலிருந்து விலகி மாவட்ட அதிமுக செயலா் தச்சை என். கணேசராஜா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
இந்நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலா் மகபூப் ஜான், மாவட்ட மாணவரணிச் செயலா் சிவந்தி மகா ராஜேந்திரன், மாநிலங்களவை முன்னாள் உறுப்பினா் சௌந்தரராஜன், பகுதிச் செயலா்கள் எஸ்.எஸ்.ஹயாத், மோகன், ஜோதிபுரம் சுப்புராம், ஜெயலலிதா பேரவை பாளையங்கோட்டை ஒன்றியச் செயலா் முத்துக்குட்டி பாண்டியன், தச்சநல்லூா் பகுதிச் செயலா் மேகை சக்திகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.