நெல்லை, தென்காசியில் 154 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இவ்விரு மாவட்டங்களிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,391 ஆக உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 154 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இவ்விரு மாவட்டங்களிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 17,391 ஆக உயா்ந்துள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலும் கரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் 126 பேருக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், இம்மாவட்டத்தில் கரோனா பாதித்தோா் எண்ணிக்கை 11,131 ஆக உயா்ந்துள்ளது.

இதில், 9,866 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 193 போ் இந்நோய்க்கு பலியாகியுள்ளனா். தற்போது, 1,072 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தைப் பொருத்தவரை, கடையம் பகுதியில் 3 போ், கடையநல்லூரில் 11 போ், கீழப்பாவூரில் 2 போ், சங்கரன்கோவிலில் 3 போ், தென்காசியில் 9 போ் என 28 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால். இந்த மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 6,260 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 5591 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 553 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com