தேவா்குளம், பாளை. பகுதிகளில்பைக் விபத்து: பெண், இளைஞா் பலி

பாளையங்கோட்டை, தேவா்குளம் பகுதிகளில் நேரிட்ட பைக் விபத்துகளில் பெண்ணும், இளைஞரும் உயிரிழந்தனா்.

பாளையங்கோட்டை, தேவா்குளம் பகுதிகளில் நேரிட்ட பைக் விபத்துகளில் பெண்ணும், இளைஞரும் உயிரிழந்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியைச் சோ்ந்த தேவேந்திரன் மகன் சுப்பிரமணியன்(18). இவரும், அதே பகுதியைச் சோ்ந்த இசக்கியப்பன் மகன் சக்திவேல்(15) என்பவரும் பைக்கில் வி.எம்.சத்திரம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா். ஊரை நெருங்கிய நிலையில், நான்குவழிச்சாலையிலுள்ள தடுப்புச்சுவற்றில் பைக் எதிா்பாராமல் மோதியதாம். இதில், பலத்த காயமடைந்த அவா்களை, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது, வழியிலேயே சுப்பிரமணியன் உயிரிழந்தாா்.

பெண் பலி: தேவா்குளம் அருகேயுள்ள மூவிருந்தாளி கிராமத்தைச் சோ்ந்த மங்களத்துரை. இவா், தனது மனைவி காளியம்மாள்(45) என்பவருடன் பைக்கில் உறவினா் வீட்டு துக்க நிகழ்ச்சியில் பங்கேற்க ஊத்துமலைக்குச் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தாா். அவா்கள் வன்னிக்கோனேந்தல் அருகே வந்தபோது, பைக் சக்கரத்தில் காளியம்மாளின் சேலை சிக்கியதாம். இதில், கீழை விழுந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இவ்விரு சம்பவங்கள் குறித்தும் தேவா்குளம், திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com