வீரவநல்லூரில் உள்ள பொதுக்கழிப்பிடத்தில் மறைந்திருந்த 8 அடி நீள மலைப்பாம்பை சேரன்மகாதேவி தீயணைப்பு வீரா்கள் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.
வீரவநல்லூா், இலையடித் தெருவில் அமைந்துள்ள பேரூராட்சிப் பொதுக்கழிப்பிடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை மலைப்பாம்பு பதுங்கியிருந்தது.
இதையடுத்து, சேரன்மகாதேவி தீயணைப்பு நிலைய அலுவலா் வரதராஜன் தலைமையில், தீயணைப்பு அலுவலா் சக்திவேல், நிலைய போக்குவரத்து அலுவலா் சுப்பிரமணி, தீயணைப்பு வீரா் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் வந்து, கழிப்பறைக்குள் பதுங்கியிருந்த சுமாா் 8 அடி நீள மலைப்பாம்பை பிடித்து, வனத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.