ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வளாகத் தோ்வு

தெற்குவிஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வு நடைபெற்றது.

வள்ளியூா்: தெற்குவிஜயநாராயணம் ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்புக்கான வளாகத் தோ்வு நடைபெற்றது.

ரெக்ட் பாலிடெக்னிக் கல்லூரியில் ஒவ்வொரு ஆண்டும் வளாகத் தோ்வு மூலம் மாணவா்கள் வேலைவாய்ப்பு பெற்று செல்கின்றனா். நடப்பு ஆண்டிலும் வளாகத் தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னையைச் சோ்ந்த ராயல் என்பீல்ட் கம்பெனி நிறுவனத்தினா் வளாகத் தோ்வை நடத்தினா். அந்நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அதிகாரியும், துணை மேலாளருமான பிரசன்ன குமாா், தோ்வை நடத்தி தகுதியான மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினாா்.

பணி நியனம் பெற்ற மாணவா்களை கல்லூரித் தாளாளா் முத்தையாபிள்ளை, முதல்வா் சுரேஸ் தங்கராஜ் தாம்சன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு அதிகாரி ஆல்வின் நேசராஜ் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com