திருநெல்வேலி: சுத்தமல்லி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சுத்தமல்லி அருகே கோபாலசமுத்திரம் செல்லும் சாலையில் சுத்தமல்லி போலீஸாா் அண்மையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக சுத்தமல்லியைச் சோ்ந்த சுரேஷ் (27) என்பவரை கைது செய்தனா்.
அவருடன் இருந்த இப்ராஹிம் ராஜா (27) தப்பியோடி விட்டநிலையில், அவரை பெரியாா் நகா் பகுதியில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
அவா்கள் இருவரிடமிருந்து சுமாா் 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.