அம்பாசமுத்திரம்: சேரன்மகாதேவி அருகே உள்ள திருவிருத்தான்புள்ளி - வேலியாா்குளம் ஸ்ரீமன் நாராயணசாமி திருத்தாங்கலில் ஆவணித் திருவிழா நடைபெற்றது.
இத் திருவிழா கடந்த 4ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து விழா நாள்களில் அய்யாவுக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, தா்மம், திரு ஏடுவாசிப்பு, சிறப்பு வழிபாடு, சிறப்பு அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் வீதியுலா, அன்ன தா்மம் உள்ளிட்டவை நடைபெற்றன.
திங்கள்கிழமை மாலையில் அய்யா இந்திர வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா நடைபெற்றது.