வள்ளியூா்: வள்ளியூா் ரயில்வே சுரங்கப் பாதை அணுகு சாலையை சீரமைக்க வேண்டும் என வியாபாரிகள் சங்கச் செயலா் எஸ்.ராஜ்குமாா் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பியுள்ளாா்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது: வள்ளியூா்-திருச்செந்தூா் சாலையில் வள்ளியூரில் உள்ள ரயில்வே கிராஸிங் பகுதியில் சுரங்கப் பாதை வேலை நடந்து வருவதால், வாகனங்கள் செல்வதற்கு ரயில்வே தண்டவாளத்தையொட்டி மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றுப் பாதை மிகவும் பழுதடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் விபத்துகள் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த அணுகுசாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.