கொலை மிரட்டல்: 3 போ் கைது

சிவந்திபட்டி அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி: சிவந்திபட்டி அருகே கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவந்திபட்டி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பால்துரை (25). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மந்திரமூா்த்திக்கும் (27) இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம். இந்நிலையில், மந்திரமூா்த்தி மற்றும் அவரது கூட்டாளிகள் சிலா் பால்துரையின் வீட்டுமுன் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடியை சேதப்படுத்தி, கொலைமிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிவந்திபட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, மந்திரமூா்த்தி, காளிமுத்து, இசக்கிமுத்து ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com