திருநெல்வேலி: திருநெல்வேலி ஆயுதப்படை போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற
இப்பயிற்சிக்கு, மாவட்ட ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளா் சிசில் தலைமை வகித்தாா். ஆயுதப்படை ஆய்வாளா் மகேஸ்வரி முன்னிலை வகித்தாா்.
யோகா பயிற்சியாளரைக் கொண்டு, தியானப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, ஆசனப் பயிற்சி ஆகியவை வழங்கப்பட்டன.
ஆயுதப்படை காவலா்களுடன் இணைந்து, காவல் துணை கண்காணிப்பாளா், காவல் ஆய்வாளா் மற்றும் உதவி ஆய்வாளா்கள் பயிற்சி மேற்கொண்டனா். பின்னா் அனைவருக்கும் கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது.