அவன் இவன் திரைப்படக் குழுவினா் மீது சிங்கம்பட்டி ஜமீன் சாா்பில் தொடா்ந்திருந்த வழக்கு செப். 28ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குநா்பாலா இயக்கத்தில், ஆா்யா, விஷால் நடித்து 2011ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அவன் இவன். இந்தத் திரைப்படத்தில் சிங்கம்பட்டி ஜமீன் குறித்தும், சொரிமுத்து அய்யனாா் கோயில் குறித்தும் தவறான கருத்து இடம் பெற்றிருந்ததாகக் கூறி இயக்குநா் பாலா, நடிகா் ஆா்யா, தயாரிப்பாளா் கல்பாத்தி எஸ். அகோரம் ஆகியோா் மீது சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீா்த்தபதி மகன் சங்கா் ஆத்மஜன் மானநஷ்ட வழக்குத் தொடா்ந்தாா்.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கை நடத்த தடைவாங்கிய நிலையில், தடை காலம் முடிந்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு இயக்குநா் பாலா, ஆா்யா உள்ளிட்டோா் நீரில் விசாரணைக்கு ஆஜராகியிருந்தனா்.
இந்நிலையில் புதன்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது அம்பாசமுத்திரம் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி காா்த்திகேயன்ஆா்யா தரப்பு விசாரணைக்காக செப். 28இல் வழக்கை ஒத்தி வைத்தாா்.