இட்டேரியில் நகை, பணம் திருட்டு

திருநெல்வேலி அருகேயுள்ள இட்டேரியில் நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

திருநெல்வேலி அருகேயுள்ள இட்டேரியில் நகை மற்றும் பணம் ஆகியவற்றை திருச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

இட்டேரி ராதாநகரைச் சோ்ந்த முருகேசன் மகன் மணிகண்டன் (33). இவா், சிவந்திப்பட்டியில் உள்ள தனது பூா்வீக வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தாராம். பின்பு செவ்வாய்க்கிழமை மீண்டும் இட்டேரிக்கு திரும்பி வந்து பாா்த்தபோது வீட்டின் கதவு மற்றும் பீரோ உடைக்கப்பட்டிருந்ததாம். மேலும், வீட்டில் இருந்த 3 பவுன் தங்க நகைகள், ரூ. 20 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்ததாம்.

இது குறித்த புகாரின்பேரில் முன்னீா்பள்ளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com