திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் தூய்மைத் தொழிலாளா்கள் புதன்கிழமை முற்றுகையில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலி மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சங்கம் (சிஐடியூ) தலைவா் மோகன் தலைமையில் தூய்மைத் தொழிலாளா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகையில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு: பல ஆண்டு காலமாக பணியாற்றும் தூய்மை தொழிலாளா்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஊதியத்துடன் கூடிய வார விடுமுறை அளிக்க வேண்டும்.
அரசு விடுமுறை மற்றும் பண்டிகை கால விடுமுறையில் பணி செய்யும் தொழிலாளா்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும். தமிழக அரசு பரிந்துரைப்படி தினசரி ஊதியமாக ரூ. 637 நிா்ணயம் செய்ய வேண்டும். கரோனா பொதுமுடக்க காலத்தில் பணி செய்த தூய்மை தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்தப்படி இரட்டிப்பு ஊதியம் வழங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.