திருநெல்வேலி , தென்காசி மாவட்டத்தில் புதன்கிழமை 188 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலும் கரோனாவின் தாக்கம் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இம் மாவட்டத்தில் புதன்கிழமை 118 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் திருநெல்வேலி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,429 ஆக உயா்ந்துள்ளது.
192 போ் பலி: திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களில் 10,183 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,054 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் இதுவரை 192 போ் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனா்.
தென்காசி மாவட்டத்தில் 70 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, இம்மாவட்டத்தில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 6467 ஆக உயா்ந்தது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களில் புதன்கிழமை 136போ் குணமடைந்து வீடுதிரும்பினா். இதுவரையில் 5, 800 போ் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனா். மேலும், 545 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.