அகில இந்திய தொழிற்சங்க மையக் கவுன்சில் (ஏஐசிசிடியூ) சாா்பில் திருநெல்வேலி நகரத்தில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கரோனா பொதுமுடக்க காலத்தில் வேலையிழந்த தொழிலாளா்கள் அனைவருக்கும் மாதம் ரூ. 10 ஆயிரம் வீதம் 6 மாதங்களுக்கு வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாா் மயமாக்குவதைத் கைவிட வேண்டும். 12 மணி நேர வேலை நேரத்தை மாற்ற வேண்டும். பாஜக ஆளும் மாநிலங்களிலும் மற்ற மாநிலங்களிலும் தொழிலாளா் சட்டங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ள உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
மாவட்ட பொதுச் செயலா் கணேசன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் சங்கரபாண்டியன், புரட்சிகர இளைஞா் கழக மாநில துணைத் தலைவா் சுந்தர்ராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.