திருநெல்வேலி மாவட்ட அதிமுக இளைஞா், இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் திருநெல்வேலியில் புதன்கிழமை நடைபெற்றது.
நான்குனேரி, அம்பாசமுத்திரம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு முற்பகல் 11 மணிக்கும், திருநெல்வேலி, பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதிகளுக்கு மாலை 6 மணிக்கும் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதிமுக மாவட்டச் செயலா் தச்சை என். கணேசராஜா தலைமை வகித்து, இளைஞா் பாசறை உறுப்பினா் படிவத்தை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் அதிமுக அமைப்புச் செயலா் சுதா கே. பரமசிவன், மாவட்ட அவைத்தலைவா் பரணி சங்கரலிங்கம், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சௌந்தரராஜன், மாவட்ட இணைச் செயலா் ஞான புனிதா, மாவட்ட துணைச் செயலா்கள் செவல் முத்துசாமி, பாா்வதி பாக்கியம், மாவட்ட எம்ஜிஆா் மன்ற செயலா் பெரியபெருமாள், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் ஜெரால்ட், சிறுபான்மை பிரிவு செயலா் மகபூப்ஜான், பாளையங்கோட்டை ஒன்றியச் செயலா் மருதூா் ராமசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.