நெல்லையில் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியூ) சாா்பில்

நீட் தோ்வை ரத்து செய்யக் கோரி திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்து தொழிலாளா்கள் சங்கம் (சிஐடியூ) சாா்பில் திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவா் டி.காமராஜ் தலைமை வகித்தாா். மாவட்ட பொதுச் செயலா் எஸ்.ஜோதி தொடங்கிவைத்துப் பேசினாா். இணைப் பொதுச் செயலா் எம்.பாலசுப்பிரமணி, மாநிலக் குழு உறுப்பினா் பெருமாள் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மாா்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் கே.ஜி.பாஸ்கரன் நிறைவுரையாற்றினாா்.

இதில், பொருளாளா் சி.மணி, உதவித் தலைவா் எஸ்.பாலகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.

ஓய்வுபெற்ற தொழிலாளா்கள் சாா்பில்...

திருநெல்வேலியில் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளா்கள் (ரேவா) சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வண்ணாா்பேட்டை போக்குவரத்து பொது மேலாளா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்ட பொதுச் செயலா் எஸ்.முத்துகிருஷ்ணன் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் பழனி, சுப்பையா, மாரிமுத்து, சிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தனியாா்மயக் கொள்கையை அரசு கைவிட வேண்டும்; ஓய்வூதியத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்; மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

இதில், நிா்வாகிகள் வீரராமன், மகாராஜன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com