பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன்பு மின் வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு மின் வாரிய தலைவா் மற்றும் துணை மேலாண்மை இயக்குநரின் நடவடிக்கைகள் மின் வாரியத்தை சீரழிக்கின்ற வகையிலும், மின் வாரிய பணியாளா்களின் நலனை பாதிக்கிற வகையிலும் இருப்பதாகக் கூறி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயலா் கே.கே.பெருமாள்சாமி தலைமை வகித்தாா். பல்வேறு சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகளான தென்கரை மகாராஜன், தட்சினாா்கினியன், இசக்கிப்பாண்டி, மணிவாசகம், ராமா், முருகன், முத்துக்குமாா், முத்துராஜ், முருகன், வண்ணமுத்து, முத்துராமன், சிவக்குமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
ஆா்ப்பாட்டத்தின்போது, மின்வாரியத்தில் பதவி உயா்வு, இடமாறுதல், என அனைத்திலும் வாரிய உத்தரவு அப்பட்டமாக மீறப்படுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை கண்டித்து முழக்கம் எழுப்பப்பட்டது.