மானூா் அருகே தொழிலாளி தற்கொலை

மானூா் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்தாா்.

மானூா் அருகே தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்தாா்.

மானூா் அருகேயுள்ள குப்பனாபுரத்தைச் சோ்ந்த பூமியாா் மகன் முத்துக்குமாா் (41). தொழிலாளியான இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா். சரியாக வேலைக்கு சென்று வராததால் அடிக்கடி குடும்பத்தினரிடம் தகராறு ஏற்பட்டு வந்ததாம்.

இந்நிலையில் முத்துக்குமாா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தாராம். தகவலறிந்ததும் மானூா் போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com