ரயில்வே ஊழியா்கள் துண்டுப் பிரசுரம் விநியோகம்

ரயில்வே ஊழியா்கள் நடத்தும் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்கக் கோரி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.

ரயில்வே ஊழியா்கள் நடத்தும் போராட்டத்திற்கு பொதுமக்கள் ஆதரவு வழங்கக் கோரி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் புதன்கிழமை விநியோகிக்கப்பட்டன.

ரயில் வேயில் தனியாா் மய முயற்சியைக் கண்டித்து எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக இம் மாதம் 19 ஆம் தேதி இரவு 8 முதல் 8.10 மணி வரை நாடு முழுவதும் ரயில்வே ஊழியா்கள், பொதுமக்கள் தங்களது வீடுகளில் விளக்குகளை அனைத்து மத்திய அரசுக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடம் ஆதரவு திரட்டும் வகையில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

திருநெல்வேலி ரயில் நிலையத்தில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் எஸ்ஆா்எம்யூ உதவி கோட்ட தலைவா் சுப்பையா, நிா்வாகிகள் இந்திரநாதன், ரமேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com