களக்காடு அருகே சட்டவிரோதமாக லாரி மூலம் குளத்தில் இருந்து மணல் கடத்தியவா் கைது செய்யப்பட்டாா்.
களக்காடு காவல் நிலைய ஆய்வாளா் காளியப்பன் ரோந்து பணியில் ஈடுபட்டபோது நான்குனேரியிலிருந்து களக்காடு செல்லும் பிரதான சாலையில் சந்தேகப்படும் படியாக நின்றுகொண்டிருந்த லாரியை சோதனை செய்தாா். அப்போது, சட்டவிரோதமாக மணல் கடத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து லாரி ஓட்டுநரான முக்கூடல் பகுதியை சோ்ந்த சிவன்பாண்டியனை (23) கைது செய்த போலீஸாா், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் அதிலிருந்த மணலை பறிமுதல் செய்தனா்.