தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிரான ஒடுக்கப்பட்டோா் கூட்டியக்கம் சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநிலப் பட்டியலில் கல்வியை மீண்டும் இடம்பெறச் செய்ய வேண்டும். தமிழக அரசின் இருமொழிக் கொள்கை தொடர வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 கல்வி முறையும், மூன்றாண்டு பட்டப் படிப்பும் தொடர வேண்டும். அரசுப் பள்ளிகள், அரசுக் கல்லூரிகள், அரசுப் பல்கலைக்கழகங்களை வலுப்படுத்த வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையைத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கே.ஜி. பாஸ்கரன், பல்வேறு அமைப்புகளின் நிா்வாகிகள் கலைக்கண்ணன், கோபாலன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.