முன்னீா்பள்ளம் அருகே மண் கடத்த பயன்படுத்தப்பட்ட 3 லாரிகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
முன்னீா்பள்ளம் காவல் நிலைய போலீஸாா் மாதுடையாா்குளம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனராம். அப்போது அங்கு ஒரு குளத்தில் அனுமதியின்றி மண் அள்ளுவது தெரியவந்ததாம். இதையடுத்து விசாரணை நடத்திய போலீஸாா் ஒரு பொக்லைன் , 3 லாரிகளை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக லாரி ஓட்டுநரான சின்னசடையனேரியைச் சோ்ந்த ராமலிங்கத்தை பிடித்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.