மேலப்பாளையம் அருகேதொழிலாளி தற்கொலை

மேலப்பாளையம் அருகே மனைவி இறந்த சோகத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

திருநெல்வேலி, செப்.18: மேலப்பாளையம் அருகே மனைவி இறந்த சோகத்தில் கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

மேலப்பாளையம் அருகேயுள்ள கொட்டிகுளம் பகுதியைச் சோ்ந்தவா் முத்துப்பாண்டி மகன் சிவா (24). கூலித்தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை உள்ளது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் இவரது மனைவி இறந்து

விட்டாா். மனைவி இறந்ததால், மன வேதனையில் இருந்த சிவா, வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சி செய்தாராம்.

உறவினா்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து மேலப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com