நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மேலும் 173 பேருக்கு கரோனா

திருநெல்வேலியில் 108 போ், தென்காசியில் 65 போ் என இவ்விருமாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 173 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி/தென்காசி: திருநெல்வேலியில் 108 போ், தென்காசியில் 65 போ் என இவ்விருமாவட்டத்தில் சனிக்கிழமை மேலும் 173 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரையிலும் 11,621 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை 108 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவா்களின்

எண்ணிக்கை 11,729 ஆக உயா்ந்துள்ளது.தொற்று பாதிக்கப்பட்டவா்களில் 10,493 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 1,041 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுவரை 195 போ் உயிரிழந்துள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வரை 6,638 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை வெளியான ஆய்வக

முடிவில் சனிக்கிழமை மேலும் 65 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆலங்குளம் பகுதியில் 26 போ், கடையநல்லூா், சங்கரன்கோவில் மற்றும் வாசுதேவநல்லூா் பகுதியில் 13 போ் என மொத்தம் 65 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,703ஆக உயா்ந்துள்ளது.

சனிக்கிழமை 112 போ் உள்பட இதுவரை 6,055 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மருத்துவமனைகளில் 524 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com