திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே தாமிரவருணி ஆற்றில் மூதாட்டி சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை மீட்டனா்.
திருநெல்வேலி அருகேயுள்ள அனந்த கிருஷ்ணாபுரம் பகுதி தாமிரவருணி ஆற்றில் 70 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் மிதப்பதாக தாழையூத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினா் சென்று, சடலத்தை மீட்டனா். போலீஸாா் அந்த சடலத்தைக் கைப்பற்றி திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்; தொடா்ந்து, விசாரித்து வருகின்றனா்.