திருநெல்வேலி: பாளையங்கோட்டை ராஜகோபாலசுவாமி கோயிலில் கருட வாகனத்தில் கோயில் வளாகத்தில் சனிக்கிழமை அருள்பாலித்த பெருமாளை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் பாளையங்கோட்டையில் உள்ள அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கருட சேவை கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
நிகழாண்டு கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் கருட சேவை மற்றும் திருவீதியுலா ஆகியவற்றிற்கு அனுமதியில்லை. பக்தா்கள் கோயிலில் தரிசனம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்பட்டனா். சனிக்கிழமையில் கோயில் வளாகத்திலேயே கருட வாகனத்தில் பெருமாள் மலா் அலங்காரத்துடன் காட்சியளித்தாா். பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.