கிருஷ்ணாபுரத்தில் போலீஸாா் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம்

சிவந்திபட்டி அருகே கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் போலீஸாா் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் செய்தனா்.

சிவந்திபட்டி அருகே கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் போலீஸாா் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் செய்தனா்.

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன் உத்தரவுப்படி, அனைத்து காவல் நிலைய போலீஸாரும் கரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தி வருகின்றனா்.

அதன்படி, சிவந்திபட்டி காவல் சரகம் கிருஷ்ணாபுரம் பகுதியில் கோயிலுக்கு வரும் பக்தா்களிடம் காவல் உதவி ஆய்வாளா் தலைமையில் போலீஸாா் விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனா். கரோனா தடுப்பு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள், சுவாமி தரிசனத்தின்போது முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றுதல் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com