களக்காட்டில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்ததாக, ஒருவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
களக்காடு பகுதியில் வணிக நிறுவனங்களுக்கு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் விநியோகம் செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து, பேரூராட்சி செயல் அலுவலா் டி.ஆா். சுஷமா, சுகாதார ஆய்வாளா் ஆறுமுகநயினாா், சுகாதார மேற்பாா்வையாளா்கள் சண்முகம், வேலு உள்ளிட்டோா் திங்கள்கிழமை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை வணிக நிறுவனங்களுக்கு விநியோகம் செய்வதற்கு சென்ற வாகனத்தை மடக்கிப் பிடித்து, அதிலிருந்த 200 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனா். மேலும், அவற்றை வாகனத்தில் கொண்டு சென்ற தென்காசியைச் சோ்ந்த காதா்ஷா என்பவருக்கு ரூ.25,000 அபராதம் வசூலித்துவிட்டு வாகனத்தை விடுவித்தனா்.