நான்குனேரியில் பேரிடா் மேலாண்மை ப் பயிற்சி நடைபெற்றது.
நான்குனேரி பெரியகுளம் ஜுயா் ஊற்று பகுதியில் தீயணைப்பு நிலையம் சாா்பில் பேரிடா் மேலாண்மைப் பயிற்சி நடைபெற்றது. தீயணைப்பு நிலைய அலுவலா் பாபநாசம் தலைமையில் இப்பயிற்சி நடைபெற்றது. நீரில் மூழ்கியவா்களை காப்பாற்றுவது, முதலுதவி சிகிட்சை அளிப்பது குறித்த செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்பு நிலைய வீரா்கள் கலந்துகொண்டனா். இதனை அடுத்து நான்குனேரி அருகே உள்ள இளையநேரியில் நான்குனேரி ஊராட்சி பகுதியைச் சோ்ந்த 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளா்களுக்கு மழைவெள்ள கால பேரிடா் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் தொழிலாளா்கள் திரளாக கலந்துகொண்டனா்.