நெல்லை, தென்காசியில் மேலும் 145 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் மேலும் 145 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவில், புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 11,989ஆக உயா்ந்தது. 119 போ் குணமடைந்து வீடு திரும்பியதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 10,861ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 194 போ் உயிரிழந்துள்ளனா். 934 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் 54 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 6915ஆக உயா்ந்தது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் 55 போ் குணமடைந்ததையடுத்து அவா்கள் செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதுவரை மொத்தம் 6150 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது 636 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com