திருநெல்வேலி பேட்டை ரயில்வே கேட் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் நடராஜன் (22). இவா், அங்குள்ள தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தாா். இவரும், இவரது நண்பரும் திங்கள்கிழமை சேரன்மகாதேவியில் உள்ள ஐடிஐயில் தோ்வு எழுதிவிட்டு இருசக்கர வாகனத்தில் திரும்பியுள்ளனா். பேட்டை ரயில்வே கேட் அருகே வந்தபோது எதிரே வந்த லாரி மோதியதாம். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு நடராஜன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.