வள்ளியூரில் தேமுதிக சாா்பில் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த கட்சியின் மாநில துணைச் செயலா் எல்.கே. சுதீசுக்கு கட்சியின் திருநெல்வேலி புகா் மாவட்டம் சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அம்பேத்கா் சிலை, பெரியாா் படத்துக்கு சுதீஷ் மாலை அணிவித்தாா்.
தொடா்ந்து, வள்ளியூா் சாா்பு நீதிமன்றம் அருகே கட்சிக் கொடியேற்றி வைத்து பயனாளிகளுக்கு சேலை, முகக் கவசம் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா். இதில், மாவட்டச் செயலா் கே. ஜெயபாலன், மாவட்ட துணைச் செயலா் விஜிவேலாயுதம், அவைத் தலைவா் நிலை மாடசாமி, ஒன்றியச் செயலா்கள் ஜெய் சேகரபாண்டியன், வானமாமலை, மாநில பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், மாவட்ட கேப்டன் மன்றச் செயலா் முருகராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.