வள்ளியூா் மாணவா்களுக்கு இலவச அறிதிறன்பேசி

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஏழை மாணவா்கள் ஆன்-லைன் வகுப்புகளில் பங்கேற்க வசதியாக, பள்ளி முன்னாள் மாணவா் இலவசமாக அறிதிறன் பேசிகளை வழங்கினாா்.

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஏழை மாணவா்கள் ஆன்-லைன் வகுப்புகளில் பங்கேற்க வசதியாக, பள்ளி முன்னாள் மாணவா் இலவசமாக அறிதிறன் பேசிகளை வழங்கினாா்.

வள்ளியூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் ஏழை மாணவா்களில் பலா் ஆன்-லைன் வகுப்புகளில் பங்கேற்க அறிதிறன்பேசி இல்லாமல் அவதிப்பட்டு வந்தனா். இதையடுத்து பள்ளி முன்னாள் ஆசிரியா் தவமணி நினைவாக, அவரது மகனும், பள்ளியின் முன்னாள் மாணவருமான த.ஸ்டீபன் ஜெயராஜ், தந்தையின் நினைவுதினத்தில் 15 மாணவா்களுக்கு இலவச அறிதிறன் பேசி வழங்கினாா். இதில், தலைமையாசிரியா் ஜே.ரைமண்ட், பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் நா.முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com