பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு-புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கம் அண்மைக்காலமாக வழக்குரைஞா்கள் மீதான புகாா்கள் குறித்து எவ்வித விசாரணையும் நடத்தாமல் வழக்குரைஞா் தொழில் செய்ய தடைவிதிப்பதைக் கண்டித்தும், கரோனா பொதுமுடக்க தளா்வுகளால் அனைத்து அலுவலகங்களும் முழுமையாக செயல்பட தொடங்கியுள்ளதைப் போல நீதிமன்றங்களும் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு வழக்குரைஞா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். மணிகண்டன் முன்னிலை வகித்தாா். வழக்குரைஞா்கள் சீதா, பழனி, பாலகணேசன், பூபதி, ராஜன், காா்த்திக், கொம்பையா, இசக்கிபாண்டி, மகேஷ், ஜெபசிங், மகாராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.