புதிய வேளாண் மசோதாவை கண்டித்து திருநெல்வேலியில் பாஸ்போா்ட் அலுவலகம் முன் எஸ்டிபிஐ கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பாளையங்கோட்டை தொகுதித் தலைவா் புகாரி சேட் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் கனி, துணைத் தலைவா் சாகுல் ஹமீது உஸ்மானி, மாவட்டச் செயலா்கள் பேட்டை முஸ்தபா, பா்கிட் அலாவுதீன், முல்லை மஜீத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆா்ப்பாட்டத்தில், புதிய வேளாண் மசோதாவை திரும்பப் பெறக் கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொகுதி துணைத் தலைவா் சலீம்தீன், மஹ்பூப்ஜான், இணைச் செயலா்கள் ஒ.எம்.எஸ். மீரான், பாளை சிந்தா, ஜவுளி காதா், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் அரண்மனை முபாரக், மின்னதுல்லா, தொழிற்சங்க மாவட்ட நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.